மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ் குமார் தலைமை வகித்தார்
ராமநாதபுரம், டிச.16-
ராமநாதபுரத்தில் புதிய தமிழகம் 28 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கூரிசாத்தனார் அய்யனார் கோயில் அருகில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
புதிய தமிழகம் கட்சி
தமிழ்நாட்டில் உள்ள ஒரு இந்திய பிராந்திய அரசியல் கட்சியாகும் . இந்த கட்சி டிசம்பர் 1997 டிசம்பர் 15 ம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி அவர்களால் நிறுவப்பட்டது. கட்சியின் 28 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மதுரை ரோட்டில் கூரிசாத்தனார் அய்யனார் கோயில் அருகில் புதிய தமிழகம் கட்சி கொடியை கட்சி நிர்வாகிகள் ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
28 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் புதிய தமிழகம் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ் குமார் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் பாலுச்சாமி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் மலை செல்வம், மாநில மகளிர் அணி செயலாளர் வசந்தா ஆகியோர் முன்னிலையில் கட்சிக்கொடி ஏற்றி கட்சிப் பணி குறித்தும் டாக்டரின் மக்கள் சேவை குறித்தும் நிர்வாகிகள் விளக்கி பேசி புதிய தமிழகம் வாழ்க வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் அவ்வழியாக வந்த பஸ் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர் துணைச் செயலாளர் கண்ணன், நயினார் கோயில் ஒன்றிய செயலாளர் ராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் சேகர், முரளி, முருகையா பாண்டி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜவேல், கடலாடி ஒன்றிய செயலாளர் (கிழக்கு) லாசர், மேற்கு ஒன்றிய செயலாளர் பேரின்பராஜ், பரமக்குடி நகர் செயலாளர் சிங்கராஜ், முன்னாள் நகர் செயலாளர் கோபி, ராமநாதபுரம் நகர் இளைஞர் அணி செயலாளர் மகேந்திரன், நகரத் துணைச் செயலாளர் வினோத், திருப்புல்லாணி ஒன்றிய கிளைச் செயலாளர் பழனி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர் பேரூர் கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மகளிர் அணியினர், இளைஞர் அணியினர், வர்த்தக அணியினர் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.