தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ஆபரேஷன் சிந்துரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பாஜகவினர் வெற்றி யாத்திரை ஊர்வலம் ஆர் .கே. கணேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சங்கீதா, மத்திய அரசு நல திட்ட பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் பி. கே. சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு யாத்திரையை துவக்கி வைத்தனர். இந்த வெற்றி யாத்திரையானது பாலக்கோடு தக்காளி மண்டியிலிருந்து கடைவீதி வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த ஆபரேஷன் சித்தூரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்திம் விதமாக மூவர்ணக் கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சாமிக்கண்ணு, இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் ராஜி, கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் முரளி, தெய்வமணி, நகர தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர் சின்னவன் ,நகர பொருளாளர் முனியப்பன், சரவணன், சின்னசாமி, சசிகுமார், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கணேசன், முன்னாள் மீனவர் அணி மாவட்ட தலைவர் மாதையன், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதேவி, நகர பொதுச்செயலாளர் தண்டபாணி, ஜெய்கணேஷ், செயலாளர்கள் பசுபதி, மணிவண்ணன், முனியப்பன், சாமுவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



