தஞ்சாவூர் மே 29.
தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி க்கு தஞ்சாவூரில் சிலை அமைக்க வேண்டும் என செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் இறைவன் தலைமை தாங்கினார். திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ் எஸ் பழனி மாணிக்கம், முரசொலி எம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட செயலர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ வரவேற்றுப் பேசினார்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை இந்த ஆண்டு முதல் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவிப்பது, சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் ஒப்புதல் வழங்க கால தாமதம் செய்த தமிழக கவர்னரை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து, கவர்னருக்கும் ஜனாதிபதிக்கு காலவரம்பை நிர்ணயித்து பெற்ற தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது.
கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் மாதம் முழுவதும் ஆதரவற்ற முதியோர் மற்றும் மாணவ மனைவிகள் விடுதிகளில் அறுசுவை உணவு வழங்குவதோடு அனைத்து வார்டுகள் மற்றும் கிளை கழகங்கள் கொடியேற்றி, இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடுவது
தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் பெரியார், அண்ணா சிலை அருகே கருணாநிதிக்கு உருவ சிலை அமைக்க வேண்டும். அமலாக்கத் துறை, வருமானத் துறை, சிபிஐ போன்ற அமைப்பு களை அரசியல் பழி வாங்கும் நோக்கத்திற்கு பயன்படுத்தும் மத்திய பா.ஜனதாஅரசின் அதிகார அத்துமீறலை வன்மையாக கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
முன்னதாக பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், ரோமன் கத்தோலிக் க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவிற்கும், தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் மறைவிற்கும் இரங்கள் தெரிவிக் கப்பட்டது
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி கே ஜி நீலவேகம் எம்எல்ஏ, ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, செல்வம், மாநில விவசாய அணி துணை செயலர் ஜித்து, திருவையாறு தொகுதி பார்வையாளர் நாகை மனோகரன், மாநகர செயலர் மேயர் சண்.இராமநாதன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, கனகவல்லி பாலாஜி மற்றும் ஒன்றிய செயலாளர், பகுதி செயலாளர், இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்



