சங்கரன்கோவில், நவ. 14 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் 2025 ஆண்டுக்கான ஆண்கள் ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பை’ போட்டி வரும் நவ.28 ம்தேதி முதல் டிச.10 ம்தேதி வரை நடைபெறவிருப்பதையடுத்து வெற்றிக்கோப்பைக்கான பயணமானது தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்ப்பட்டு வருகிறது.
இதனை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கடந்த 10ம் தேதி வெற்றிக்கோப்பை சுற்றுப்பயணத்தையும், காங்கேயன் சின்னத்தையும் அறிமுகப்படுத்தி துவக்கி வைத்தார். அதனையடுத்து கன்னியாகுமரி, நெல்லை, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக இன்று மாலை சங்கரன்கோவில் ஶ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வந்தடைந்தது. இவ்வெற்றிக் கோப்பையினை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கரன்கோவில் எம்எல்ஏ.வுமான ராஜா, வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன்திருமலைக்குமார் ஆகியோர் காட்சிபடுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், ஹாக்கி யூனிட் ஆப் தென்காசி செயலாளர் பால்மகேஷ், தென்காசி ஏடிஎஸ்பி அறிவழகன், ஶ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ராஜேஸ்கண்ணா, தலைமை ஆசிரியர் ந. பழனிச்செல்வம், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், திமுக நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த விளையாட்டு சங்க செயலாளர்கள், பிரதிநிதிகள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



