தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் காந்திராஜன் எம்.எல்.ஏ தலைமையில் மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ., ஈ.ராஜா அவர்கள், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ., மருத்துவர். சதன் திருமலைக்குமார் ஆகியோர் சக சட்டமன்ற உறுப்பினர்களுடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், சங்கரன்கோவில் புறவழிச் சாலை, சங்கரன்கோவில் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், வாடிக்கோட்டை பகுதியில் சோலார் மின்நிலையம் அமைக்க உள்ள பணிகளையும் ஆய்வு செய்தார் உடன் சங்கரன்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



