தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வ.உ. சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எல்.ரமேஷ், வ.உ.சிதம்பரனாரின் வாரிசுதார் உ.செல்வி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.