நெல்லை,
மார்ச் 13 நெல்லை
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனர் வேந்தர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்களால் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தமிழ்ப்பேராயம் தலைசிறந்த எண்ணற்ற தமிழ்ப்பணிகளை ஆற்றிவருகிறது.
இதனைத் தொடர்ந்து
தமிழ் அருட்சுனைஞர் சான்றிதழ்ப் படிப்பு, வள்ளலார் சான்றிதழ்ப் படிப்பு முதலானவற்றோடு பல லட்சம் மதிப்பிலான தமிழ்ப் பேராய விருதுகள் வழங்குதல், அரிய நூல்களை வெளியிடுதல், பன்னாட்டு தேசிய மாநாடுகளை ஒருங்கிணைத்தல் எனப் பல்வேறு சிறந்த பணிகளை ஆற்றிவருகிறது.
மேலும்
தமிழ்ப்பேராயம் வழி மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த பல ஆயிரம் மாணவர்களைக் கொண்ட பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் மாணவர்களுக்கான பேச்சாற்றலை அங்கீகரிக்கும் நோக்கத்தில் சொல் தமிழா சொல் 2025 என்னும் தலைப்பில் மிகப் பிரம்மாண்டமான பேச்சுப்போட்டி
7-வது மண்டலத்திற்கான பேச்சுப் போட்டி நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெற்றது.
இதில் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள்,
6 நடுவர்கள் என போட்டி
பல சுற்றுகளாக நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான
இறுதிப் போட்டியன்று வெற்றியாளர்களுக்கான
பரிசுகள் வழங்கப்படும் என தமிழ் பேராயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல் 2025
Leave a comment