தென்காசி மாவட்டம்
சுரண்டையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் டிஜிட்டல் அரசியல் பயிற்சி பட்டறை மற்றும் முதல் மாநில மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு குறித்து தென்காசி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மற்றும் அரசியல் களத்தில் இளம் தொண்டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் வகையில் டிஜிட்டல் அரசியல் பயிற்சி பட்டறை சுரண்டையில் நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறையில் சிறப்பு விருந்தினர்களாக போரம் ஆப் டிஜிட்டல் பாலிடிக்ஸ் அமைப்பின் தேசிய செயலாளர் தேடல் ஆனந்தன், மதுரை கமலம் வெஞ்சர்ஸ் தலைவர் ஜே.கே.முத்து, சமுத்ரா பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவனர் சமுத்ரா செந்தில் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
இதில் சுரண்டை நிர்வாகிகள் கணேசன், வெற்றிவேல்ராஜன்,மாரிசெல்வம்,சரவணன், முத்துக்குமார், அரவிந்த், முகிலன், சரத், ராஜா, கிருஷ்ணமூர்த்தி மனோகர், சிவா,சுதன், மதன், .சேதுஅபிஷேக், ஆனந்த், பூர்ணலிங்கம்,அர்ஜின் நாகராஜ், ரமேஷ்,கோபால் மற்றும் கழக நிர்வாகிகள், வழக்கறிஞர் அணி அகரக்கட்டு அ.தேவசகாயம், தென்காசி முத்துக்குமார், கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் சரவணன், ஸ்ரீதர், கனகராஜ், கேபிரியல், மணி, கடையம் ஒன்றிய தலைவர் லெட்சியகாந்தன். இளைஞரணி ஐயப்பன், ஆலங்குளம் தொகுதி இம்மானுவேல் ராஜன், பத்மநாபன் மற்றும் சுரண்டை,தென்காசி, கடையம், கடையநல்லூர்,ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்சியின் முதல் மாநாட்டுக்கு தென்காசி தெற்கு மாவட்டத்தில் இருந்து 5000 பேர் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.