மின்வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கம் நாள் கூட்டம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்/கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர் மற்றும் பணியாளர்களின் கவனத்திற்கு .
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவின்படி தலைமை பொறியாள்/பகிர்மானம்/வேலூர் மண்டலம்/வேலூர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டத்தில் புரிந்து ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர்/பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும் உடனடியாக தீர்த்து வைக்கவும், உரிய ஆலோசனை 3 (மூன்று) பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவின் ஒவ்வொரு காலண்டிற்கு ஒரு முறை வேலூர் மண்டல அலுவலகத்தில் கூடி மின் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர்/பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும், உரிய தீர்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2024-ம் ஆண்டின் கூட்டம் மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் வரும் 18.09.2024 புதன் கிழமை அன்று காலை 11.00 மணி அளவில் வேலூர் மின் பகிர்மான வட்டம் மத்திய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் (Conference Hall) நடை பெற உள்ளது.
அச்சமயம் மின்வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் குறைகளை தீர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள, மேற்பார்வை பொறியாளர் 12/09/2 கிமிபவ/கிருஷ்ணகிரி.