தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பூங்காவில் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றிகளும், வணக்கங்களும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
வருகின்ற 15 நாட்களுக்குள் நடைபெற இருக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை பற்றி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு, தனியார் பேருந்து இலவச அடையாள அட்டை, சங்கத்தின் இந்த வருட அடையாள அட்டை வழங்குதல் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகளை குறித்து விவாதிக்கப்பட்டது.
கோரிக்கைகள் :-
1. சங்கம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்.
சங்கத்தின் அடையாள அட்டை வைத்து தவறான முறையில் பயன்படுத்துபவர்களை உடனடியாக சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்.
சங்கத்தின் அடையாள அட்டை புதுப்பிக்க குறிப்பிட்ட கால நேரத்தில் தொகையை செலுத்தாதவர்களை சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்.
மக்கள் தொடர்பு அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனத்தினால் பரிந்துரை கடிதம் கொடுத்துள்ள நபர்களை மட்டும் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கப்படும். உள்ளிட்ட கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்:-
1. தருமபுரி மாவட்ட தினமலர் செய்தியாளர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க உறுப்பினருமான ராஜபாண்டி அவர்களின் தாயார் மறைவுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் தருமபுரி மாவட்ட சார்பாக இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2. கடந்த 2019 ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட அரசு அடையாள அட்டையை வழங்குமாறு ஆட்சியர் அவர்களிடம் வலியுறுத்தி அடையாள அட்டையை பெற்று தருவது.
3. பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டுமனையில் மத்திய அரசு திட்டங்கள் மூலம் வீடு கட்டி கொடுக்கும்படி ஆட்சியர் அவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டி வலியுறுத்தப்படும்.
4. புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகையாளர் அறை ஒதுக்குமாரு ஆட்சியரிடம் வலியுறுத்தப்படும்.
என சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .இந்நிகழ்ச்சியில் தேசிய குழு உறுப்பினரும், மாவட்ட தலைவர் M.சுரேஷ், மாவட்ட செயலாளர் R. மணிகண்டன், மாவட்ட பொருளாளர் G. புகழேந்தி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் சீனிவாசன், மாநில முன்னாள் பொதுச் செயலாளர் மணி, மாவட்ட கௌரவ தலைவர் சோமசுந்தரம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட இணை செயலாளர் குரு பிரசாத் நன்றி உரையாற்றினார்.