திண்டுக்கல் ஜுன் :12
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் 2024 -2026 – ஆம் ஆண்டுகளுக் கான மாநில நிர்வாகிகள் தேர்தல் கோவையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளராக திண்டுக்க அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர்.அ. சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஏற்கனவே தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் பொது சுகாதாரத் துறை பிரிவின் மாநில செயலாளராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.இவர் தற்பொழுது திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வருகிறார். தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாநில தலைவராக மதுரையை சேர்ந்த டாக்டர் கே.செந்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளராக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் பிரபு சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவைத் தலைவராக கோவையை சேர்ந்த மருத்துவர் ரவிசங்கர் அவர்கள் நியமிக்கப்பட்டார். மேலும் துறை பிரிவுகளின் செயலர்களாக மருத்துவர்கள் சந்திரசேகர், ஜெஸ்லின், சுந்தரராஜன் ஆகியோரும் துணைத் தலைவர்களாக மருத்துவர்கள் கனகராஜன், அன்பழகன், ராஜேஷ்குமார் ஆகியோரும் இணைச் செயலாளர்களாக மருத்துவர்கள் தனசேகரன், பாலச்சந்தர், சுரேஷ்குமார், குலோத்துங்கச்சோழன், கோகுலகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் டாக்டர்.அ.சீனிவாசன் அவர்களை திண்டுக்கல் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகளான மருத்துவர்கள் சுரேஷ்பாபு ,திருலோகசந்திரன், நாகராஜன், சதீஷ்பாபு, ஷேக் அப்துல்லா, குமார், வினோத், அசோக்குமார் ஆகியோர் வாழ்த்தினார்கள்.



