கோவை புறநகர் கிழக்கு மாவட்டம்
சூலூர் பகுதியில்
மாவட்ட செயலாளர் பாபு தலைமையில்
மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கின்ற வகையிலும் வக்பு சொத்துக்களில் மத்திய அரசு தலையிடுவதை கண்டித்தும் சிறுபான்மையினரை வஞ்சிக்கின்றது என்றும் மதத்தின் பெயரால் மக்களைபிளவுபடுத்துகின்ற வகையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை சிதைக்கின்ற மற்றும் அரசியல் சட்டத்தை மீறுகின்ற வகையிலும் பிரிவினையை தூண்டுகின்ற வகையிலும் வக்பு சட்ட திருத்த மசோதா அமைந்துள்ளது. ஆகவே அதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி
கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்
சரவணன்,
மோகனபிரியா,
ரோகித்ராஜா
சதீஷ் தமிழ்ச்செல்வன்
சந்தோஷ்
அஸ்வின்குமார்
இருகூர் மணி
தங்கசெல்வன்
சுந்தர்கணேஷ்
மோகன்
ஜெகநாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் சுன்னத் ஜமாத் சூலூர் தலைவர் கலீல் ரகுமான் தலைமையில் ஜமாத் நிர்வாகிகளும் தமிழக வெற்றிக்கழக கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர்.



