கோவை நவ:16
பொள்ளாச்சியில் பிரதான சாலையான பொள்ளாச்சி பாலக்காடு இணைக்கும் முக்கிய சாலையின் மேம்பாலத்தில் உள்ள இணைப்பு கம்பிகள் முறையாக இணைக்கப்படாதால் குண்டும் குழியுமாகவும் கம்பிகள் வெளியே தென்பட்டும் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். நீண்ட காலம் இந்த கோரிக்கையை நெடுஞ்சாலை துறையிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று சாலை மறியலில் ஈடுபடுகின்றோம் எனவும், விரைவில் சாலையை சரி செய்யுமாறு கோரிக்கையும் முன்வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



