அஞ்சுகிராமம் மே -15
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம் தனது குடும்பத்துடன் சென்னையில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து ஆசி பெற்றார். அப்பொழுது அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்தில் ஆளும் திமுகவிற்கு எதிராக போராட்டங்கள், பொது கூட்டங்கள், தின்னை பிரச்சாரம், விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை சிறப்பாக செய்து வருவதை எடப்பாடி.கே.பழனிச்சாமி பாராட்டினார்.
இந்த சந்திப்பு அதிமுக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ முன்னிலையில் நடைபெற்றது.