தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலை விழா தருமபுரி அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சிவதாஸ் தலைமை தாங்கினார். நேரு யுவகேந்திரா கணக்கு மற்றும் திட்ட அலுவலர் அப்துல் காதர் வரவேற்றுபேசினார். மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத்குமார் திட்ட விளக்க உரையாற்றினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். விழாவில் எம்.எல்.ஏக்கள் கே. பி. அன்பழகன், கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்கள். நிகழ்ச்சியில் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்வி, இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் கவுரி, இந்திய அஞ்சல் துறை தலைமை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் மகாத்மா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். விழாவில் இந்திய அஞ்சல் துறை, இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட தொழில் மையம் மகளிர் திட்டம் போன்ற அரசுத் துறை சார்ந்த திறன் மேம்பாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. 15 முதல் 29 வயதிற்கு உட்பட்ட பள்ளி கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்கு கவிதை போட்டி, பேச்சுபோட்டி, ஓவிய போட்டி, கைபேசி மூலம் புகைப்படம் எடுத்தல் போட்டி, கிராமிய குழு நடனம், அறிவியல் குழு கண்காட்சி, தனிநபர் அறிவியல் கண்காட்சி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி பாரம்பரிய சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியை ரேகா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் நேரு யுவா கேந்திரா வின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் இளையோர் கலை விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics