சிவகங்கை:பிப்:07
சிவகங்கை மாவட்டம் அரசனூர் கிராமத்திற்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 40 வருடங்களுக்கு மேலாக வந்த பேருந்து காலை,இரவு என 6 முறை அரசனுர் கிராமத்திற்கு வந்து சென்றது.அந்த பேருந்து காலை 8.30மணிக்குஅரசனூர் கிராமத்திற்கு வந்து காலை8.45 மணிக்கு புறப்படும் அதனால் மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடிந்தது. ஆனால் தற்போது 3 மாதத்திற்கு முன்னதாக இலுப்பகுடி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் பேருந்து 9மணிக்கு மேல் அரசனூர் வருகிறது.
இதனால் பள்ளி மாணவர்கள் குறிப்பிட நேரத்தில் பள்ளி செல்ல முடியவில்லை . மேலும் பேருந்து வர தாமதமாவதால் ஆட்டோவுக்கு ரூ.40 முதல்ரூ. 50 வரை செலவு ஆகிறது. எனவும் தெரிவித்தன ர்.அதனால்
அரசு பேருந்தை மாணவர்கள் சிறை பிடித்தாக கூறப்படுகிறது.
மேலும் மாணவர்கள் கூறியதாவது: 40 வருடங்களுக்கு மேலாக வந்த TN58N1869 கொண்ட அரசு பேருந்து பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரசனூர் வரை வந்து செல்லும் அதனால் காலை நேரத்தில் பள்ளிக்கு சரியான நேரத்தில் பள்ளிக்கு விடுவோம். ஆனால் தற்பொழுது இலுப்பக்குடி வரை பேருந்தை நீட்டிப்பு செய்ததால் எங்களால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல இயலவில்லை. மேலும் இழுப்பக்குடியில் இருந்து வரும் பொழுது பேருந்து கூட்டமாக வருகின்றது. இதனால் பள்ளி மாணவர்களான நாங்கள் பேருந்தில் பயணம் செய்ய முடியவில்லை. பேருந்து விட்டு விட்டால் ஆட்டோவுக்கு பணம் கொடுத்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. மதுரை கோட்ட மேலாளரிடம் ஊர் பொதுமக்கள் மூன்று முறை மனு கொடுத்தும் பெயரளவில் வந்து விசாரணை நடத்தினர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் நாங்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மாணவர்கள் கூறினார்.
அதன் பின்பு திருப்புவனம் போக்குவரத்து கிளை AE மகேஷ் இனிமேல் பேருந்து அரசனூர் வரை மட்டும்தான் இயங்கும் இழுப்பக்குடி கிராமத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்
என தெரிவித்தார்.அதன் அடிப்படையில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பேருந்தில் ஏறி பள்ளி சென்றனர்.