கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுப்படி கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் சுசீந்தரம் பகுதியில் கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் பிரபு தலைமையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றியும் நம்பர் பலகை இன்றியும் வந்த 9 இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.



