திருவாரூர் பிப்ரவரி 14,
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் தமிழக முழுவதும் திமுகவினர் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கொல்லுமாங்குடியில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் கேப்டன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் உத்திராபதி கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பற்றி பேசினார். இந்த நிகழ்வில் மாவட்டத் துணை அமைப்பாளர்கள் தங்க குணசேகரன், ஜாகிர் உசேன், பாலமுத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் அண்டக்குடி கணபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கொல்லாபுரம் கடை தெருவிலும் திராவிட மாடல் சாதனைகள் பற்றி தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.