தருமபுரி மாவட்டத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டார். மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை அவர் நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். தொப்பையாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேறுவதை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கம்பம் பட்டி காட்டுவளவு பகுதியில் கனமழை அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளை போர்க்கள அடிப்படையில் மேற்கொண்டு விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நல்லம்பள்ளி தாலுகா அப்பனஅள்ளி கோம்பை கிராமத்தில் கனமழையால் பாதிக்ககுள்ளான வீடுகளை பார்வையிட்டு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், கோடியூர் கிராமத்தில் 350- க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சாந்தி, உதவி கலெக்டர் காயத்ரி, திமுக மாவட்ட செயலாளர் கள் பி. பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏ மனோகரன், நகராட்சி தலைவர் லட்சுமி, ஆணையாளர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், மல்ல முத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.



