மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியில் மாநில அளவிலான யோகா போட்டி, தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சர்வீஸ் நடைபெற்றது. இப்போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது உடல் திறனை வெளிப்படுத்தினர்.
அந்த வகையில்
சென்னை மதுரை விருதுநகர் கன்னியாகுமரி நாகர்கோவில் கோயம்புத்தூர் நாமக்கல் கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஐந்து வயது முதல் 15 வயது வரையிலான மாணவ, மாணவியர் யோகாசனத்தில் உள்ள பல்வேறு கலைகளை தங்களது உடலின் மூலம் ரப்பர் வளைத்து காண்போரை மெய்சிலிர்க்கும் வண்ணம் செய்து வெளிப்படுத்தினர்.
இந்த யோகா போட்டியில் சாம்பியன்ஷிப் முதல் பரிசை கன்னியாகுமரி மாவட்டம் ஜே. எஸ்.ஜே.அகாடமி மாணவி லக்சா சந்துரு முதல் பரிசையும் விருதுநகர் மாவட்டம் சத்திரிய வித்யசாலா பள்ளி 6-ம் வகுப்பு மாணவி வர்ஷினி இரண்டாவது பரிசையும் தட்டி சென்றனர்.
மேலும் சிறந்த முறையில் பல்வேறு ஆசனங்களை செய்த பத்துக்கும் மேற்பட்டோரை சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.



