தஞ்சாவூர் ஜூலை 2
தஞ்சாவூரில் நடந்த மாநில அளவி லான நீச்சல் போட்டிகள் 620 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண் டனர்.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஏ ஒய் ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது .இந்த போட்டியில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் ,திண்டுக்கல், ராஜபாளையம், வேலூர், திருநெல் வேலி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, ஈரோடு ,புதுக்கோட்டை ,தஞ்சாவூர் ஆகிய இடங்களை சேர்ந்த 620 விளையாட்டு வீரர்கள் வீராங்கனை கள் கலந்து கொண்டனர்.
இதில் 100 மீட்டர் 50 மீட்டர் 25 மீட்டர் ஆகிய பிரிவுகளின் கீழ் பிரீஸ்டைல் பட்டர்பிளை, பேக் ஸ்ட்ரோக் , பிரஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் தனித்திறன் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் 6முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள், 8வயதுக்குட்பட்டவர்கள், 9 வயதுக்கு ட்பட்டவர்கள், 10 வயதுக்குட்பட்டவர் கள், 11 வயதுக்குட்பட்டவர்கள், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் ,15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என 7 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன
இப்போட்டியினை தஞ்சாவூர் மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், இணை செயலர் நல்லாசிரியர் சதாசிவம், டாக்டர் வெங்கடேசன் தொழிலதிபர் கள் அர்சத் அகமது ,சுரேஷ் மற்றும் ஏஒய்ஏ ஸ்போர்ட்ஸ் கிளப்பின் பங்குதாரர்கள் மார்ட்டின், ஜேன்ஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போட்டியில் முதல் மூன்று இடங்க ள் பிடித்த வீரர் வீராங்கனைகளு க்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. போட்டியில் கலந் து கொண்ட அனைவருக்கும் பங்கேற்றத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளை அவர்கள் பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.