குமரி மாவட்டத்தில் ஏராளமான கத்தோலிக்க கிறித்தவ தேவாலயங்கள் உள்ளன. இந்த தேவாலாயங்களில்
மிகவும் சிறப்பு பெற்ற திருத்தலம் இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம். வருடத்தில் மே மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருக் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்
ஒவ்வொரு சனிக்கிழமை நாளில் இந்த திருத்தலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வின்றனர்.
அரசு போக்குவரத்து நிர்வாகம் ஒவ்வொரு சனிக்கிழமைகளில்,இராஜாவூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இவ்வாண்டிற்கான திருவிழா மே 2 ம் தேதி மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் ஜெபமாலை, அருள் உரை, திருப்பலி நடைபெறும். (மே-2) தொடங்கி எதிர் வரும்
மே 11வரை தொடர்கிறது.
எதிர் வரும் மே 8 ம் நாள் அதிகாலை 5.30.மணிக்கு முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலி நடைபெறவுள்ளது.
10 ம் தேதி இரவு ஆடம்பர தேர் பவனி நடக்கிறது.
திருவிழாவின் நிறைவுதினமான 11ம் தேதி அதிகாலை 5.30.மணிக்கு நடைபெறும் திருவிழா திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார்.
நண்பகல் 12 மணிக்கு ஆடம்பர தேர் பவனியும். இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலியும் நடைபெறும்.
ராஜாவூர் திருத்தலத்தின் திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டீபன் ஹென்றி,உதவி பங்கு தந்தையர்கள்
பாக்கியநாதன்,மிராண்டா, ஆன்மீக குரு வின்சென்ட்.
பங்கு பேரவைத் துணை தலைவர்
ஜே.டி.கிளாட்சன்,
செயலாளர் மிக்கேல்தேவசகாயம், துணை செயலாளர் ஜெயமேரி,பொருளாளர் ஜார்ஜ் சகாயஜோஸ், மற்றும்
பங்கு பேரவையினர்,அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர திருத்தல திருவிழாவை காண அண்டை மாவட்டங்ஙளான. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தனிப் பேருந்துகள் மூலம் பக்த்தர்கள் வருவது இந்த ஆலயத்தின் தனித்த சிறப்பு.
திருவிழாவின் 10 நாட்களும் இராஜாவூருக்கு அரசு போக்குவரத்து கழகம். நாகர்கோவிலில், வள்ளியூர் உள்ளிட்ட அண்டை ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.