ஆவடி, காமராஜர் நகரில் அருள் பாளித்து வரும்
அருள்மிகு ஸ்ரீதேவி நாகவல்லி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா.
சென்னை, ஆவடி, காமராஜர் நகர் பிரதான சாலையில் அருள் பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீதேவி நாகவல்லி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவினை தொடர்ந்து அண்ணாமலையார் கிரிவல அறக்கட்டளையின் தலைவர் சி.ராஜூ தலைமையில் தரிசனம் காண வருகை புரிந்த சுமார் 3000 த்துக்கும் மேலானா பக்தர்கள் அனைவருக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை துணைத் தலைவர் எம்.சேகர், துணைச் செயலாளர் ஆர்.கன்னியப்பன், நிகழ்ச்சி தொகுப்பாளர் லைன் டாக்டர் டி.ஜெயக்குமார் ஆகியோர் மற்றும் ஆலய நிர்வாகிகள் உட்பட கும்பாபிஷேக விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.