அரியலூர்,ஜூலை:10
அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 12.07.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதால் இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் முகம் மட்டும் தெரியும்படியான வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரடியாக வழங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்