கிருஷ்ணகிரி,ஜுன்.30- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம். சரயு உத்தரவின் பேரில் 2024 25 ஆம் நிதியாண்டிற்கான கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பயனாளிகள் தேர்வு செய்தல் குறித்து சிறப்பு கிராம சபா கூட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி கீழ் மைலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புளியம்பட்டி ஊராட்சியில் 2024 25 ஆம் நிதி ஆண்டிற்கான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் இளநிலை உதவியாளர் மு. வினோதினி, ஊராட்சி செயலாளர் சிவசங்கரன் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



