நாகர்கோவில் – ஜூலை – 01 ,
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜாக்க மங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞரின் கனவு இல்லம் 2024-25 மற்றும் பழுதடைந்த வீடுகளின் பயனாளிகள் , கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள ஓலை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளுக்கு பதிலாக புதிய காங்கிரட் வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளின் விபரம் ஆகிய கணக்கெடுப்புகளில் தகுதியான பயனாளிகளின் பெயர்கள் மற்றும் ஆர் ஆர் எச் திட்டத்தின் கீழ் 2001 ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசின் திட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள வீடுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கம் செய்வதற்கு தகுதியான பயனாளிகள் குறித்த விவரங்களை இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பித்து கிராம சபா ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இராஜாக்க மங்கலம் ஊராட்சியில் தான் மாவட்டத்தில் மிக அதிகமான 24 பயனாளிகள் பயன்பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்லதுரை மற்றும் வார்டு உறுப்பினர்கள் மகேஸ்வரி, தீபா, சுதா நேஸ்லி, சுஜி, அஜிதா, உஷா, அமுதா, எட்மன்ட் ஆனந்த், அருள் மெற்றில், கிறிஸ்து தாஸ், ராஜ திருமேனி, சிவராஜா, சிவந்தி கனி, சசிகுமார் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.