கன்னியாகுமரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கல்லூரி சேர்க்கையின் போது மாணவர்களின் ஆதார் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என சரிபார்க்கப்படுகிறது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை மாணவர்கள் புதுப்பித்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது.
உயர் கல்வி சேர்க்கையின் போது தேவையற்ற கால தாமதத்தை தவிர்க்கவும், பள்ளி மாணவர்களின் வசதிக்காகவும் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையத்தின் செயல்பாட்டு நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெருகிவரும் ஆதார் சேவையின் தேவையினை கருத்தில் கொண்டு பின்வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் காலை 9:00 மணி முதல் 4 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வழங்கப்படும்.
கோட்டார், நாகர்கோவில், கலெக்டரேட், ஆரல்வாய்மொழி, நெய்யூர், நாகர்கோவில் தொழிற்பேட்டை, அழகப்பபுரம், மார்த்தாண்டம், வடிவீஸ்வரம், அழகிய பாண்டியபுரம், குழித்துறை, அருமனை, பூதப்பாண்டி, குளச்சல், கொல்லங்கோடு, ஈத்தாமொழி, கன்னியாகுமரி, மேக்கா மண்டபம், கொட்டாரம், சுசீந்திரம், முலகமூடு, மன வாளக்குறிச்சி, வெட்டூர்ணிமடம், புதுக்கடை, திக்கணங்கோடு, களியக்காவிளை, ஆசாரி பள்ளம், இடைக்கோடு, கருங்கல், பாலப்பள்ளம், காப்புக்காடு, குலசேகரம், புத்தளம், காட்டாதுறை, திருவட்டார், பள்ளியாடி , பளுகள், எஸ்டி மங்காடு ஆகிய அஞ்சலகங்களில் ஆதார் சேவை முகாம் நடக்கிறது. இந்த சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு செய்தியை குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


