மயிலாடுதுறை
திமுகவினர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பாமக நிர்வாகி கைது
திமுகவினர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பாமக நிர்வாகி ஒருவரை குத்தாலம் போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோழம்பேட்டை அழகிய நாதர் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார்.32. பாமக கிளை செயலாளர். இவர் திமுகவினர் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் டாஸ்மாக்கில் பில் கொடுக்காததை சுட்டிக்காட்டி திமுகவினரை திட்டி பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மூர்த்தி குத்தாலம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவதூறு பரப்பியதாக வழக்கு பதிந்து ராஜ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்திய பின்னர் மயிலாடுதுறை சப்-ஜெயிலில் அடைத்தனர்.