தேனி
தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி (Innovation Fellowship program ) வழங்கப்படவுள்ளது,
இப்பயிற்சியானது கணினி பொறியியல் நிபுணத்துவம் (System Engineering expertise) புதுமைத் திறன்களை வழங்குதல் மேலும் மின்னணு வடிவமைப்பு (Electronics system Design), உற்பத்தித் துறை (Manufacturing) , தானியங்கி தொழில் துறை (Industrial Automation ) இயந்திரவில் (Robotics ) மற்றும் சேர்க்கை உற்பத்தி (Additive Manufacturing) போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத் திறன்களை உள்ளடக்கிய பயிற்சி வழங்கி அதிநவீன தொழில் நுட்ப ஸ்டார்ட்அப் (Technology Startup) நிறுவனங்களில் நிபுணராக உருவாக்குவதற்கான பாதையை வழிவகுப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
தாட்கோ மூலம் கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற 28 இளைஞர்கள் Thermofisher Scientific , Ashok Leyland, G Care India, TCS போன்ற தனியார் முன்னனி நிறுவனங்களில் Machanical- R&D, Graduate Engineer Trainee மற்றும் R&D Business Development போன்ற பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பயிற்சியினை பெற 2022, 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்று 21 முதல் 25 வயது வரையுள்ளவர்களாகவும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கால அளவு 18 வாரம் ஆகும்.
இப்பயிற்சியானது கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசுர் மற்றும் ஸ்ரீ பெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் Technology Startup, Electronioc Manufacturing Company, Mobility and Automotive Company போன்ற தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று மாதம் குறைந்தபட்சமாக ரூ.20,000/- ஊதியமாக பெறலாம். இதற்கான பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மேலாளர், தாட்கோ, அறை எண்.73, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி அவர்களை நேரிலோ அல்லது 04546-260995 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு,ரஞ்ஜீத்சிங், தெரிவித்துள்ளார்கள்