சுசீந்திரம், டிச. 19 –
நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் வருகிற 2026 புத்தாண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என தென்குமரி கல்விக் கழக செயலாளர் பி.டி. செல்வகுமார் தனது சொந்த செலவில் 108 தென்னை மர கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டு தொடங்கி வைத்தார். மேலும் ஏழை – எளிய மக்களுக்கு 100 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் தர்மலிங்கம் என்ற உடையார், செயலாளர் முனைவர் ஐய்யாத்துரை, துணைத் தலைவர் முருகன், இணைச் செயலாளர் வக்கீல் ராஜேஷ், செயற்க் குழு உறுப்பினர்கள் முனைவர் சந்திரசேகர், செல்வகுமார், ஆனந்த், கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீரங்கநாதன், கல்லூரி கண்காணிப்பாளர் கனகராஜ், தென்குமரி கல்விக் கழக செயற்குழு உறுப்பினர் ஐயப்பன், பிள்ளையார்புரம் ஸ்ரீ வைகுண்டர் பாலிடெக்னிக் கல்லூரி துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் சுந்தரலிங்கம், முனைவர் நடராஜன், தென்குமரி கல்விக் கழக பங்குதாரர் ஸ்ரீ முருகன், அரசு கல்லூரி பேராசிரியர் முனைவர் செல்வமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



