அரியலூர், ஜன;17
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1999 – 2000 ஆம் கல்வியாண்டில் +12 வகுப்பு படித்த முன்னால் மாணவ – மாணவிகள் அன்பு நண்பர்களையும் , ஆசிரியர்களையும் சந்திக்கும் நிகழ்ச்சி 13 ஆம் தேதி திங்கள் அன்று வெள்ளி விழா 2000 – 2025 ஆண்டு சங்கமம் திருவிழா பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா ஒருங்கிணைப்பு குழு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் – மாணவிகள் தங்கள் பள்ளி பருவத்தில் படித்த வகுப்பு ஆசிரியரை பற்றியும் தங்கள் குடும்பத்தை பற்றியும் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை கூறி பகிர்ந்து கொண்டனர். மேலும், 1999 அந்த ஆண்டில் தங்களுக்கு வகுப்பு ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியரின் கல்வி போதித்த அனுபவத்தையும் கூறி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் – மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்