தென்காசி மாவட்டம் சுரண்டையில் முன்னாள் பாரத பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மறைவையொட்டி மௌன அஞ்சலி ஊர்வலம் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது மௌன அஞ்சலி ஊர்வலம் சுரண்டை பேருந்து நிலையத்தில் துவங்கி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது பின்பு மன்மோகன் சிங்கின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள் மௌன அஞ்சலி ஊர்வலத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள நகர ,பேரூர் ,ஊராட்சி களைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்



