ஈரோடு பிப் -8
சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை நடத்திய சக்தி சிறப்புப்பள்ளி, மறுவாழ்வு மைய போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, வழிகாட்டி திட்ட பரிசளிப்பு விழா மற்றும் விருட்சம் திட்ட உதவித் தொகை வழங்கும் விழா நேற்று ஈரோட்டில் சக்தி துரைசாமி திருமண மாளிகையில் நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் முனைவர் பி.சி.துரைசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மனநல மருத்துவர், மனதின் மையம் அறக்கட்டளை மற்றும் ஈரோடு மனநலம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் ஜெகதீசன் சக்தி சிறப்புப் பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வுமைய மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கி பேசினார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வழிகாட்டி திட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, தொடர் ஒத்துழைப்பு நல்கி வரும் வழிகாட்டி திட்ட 41 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை கௌரவித்தும், விருட்சம் திட்டம் மாணவ, மாணவியருக்கு உதவித் தொகை வழங்கி பேசினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை சாந்தி துரைசாமி, டி.செந்தில்குமார். தீபா செந்தில்குமார், எம்.இளங்கோ, ஜி. வேணுகோபால் மற்றும் நிர்வாகத்தினர்.