ஆம்பூர், டிசம்பர்:05,
திருப்பத்தூர் மாவட்டம்
ஆம்பூர்
அடுத்த துத்திபட்டில் நிலுவையில் உள்ள வரியினங்களை உடன் செலுத்த வலியுறுத்தி ஊராட்சிக ளின் உதவி இயக்குனர் தலைமையில் தொழிற்சா லைகளில் தீவிர வரி வசூல் பணி நடந்தது.
மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் துத்திப்பட்டு ஊராட்சியில் அதிக அளவில் ஷூ தயாரிப்பு மற்றும் தோல் தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தாமல் பாக்கிவைத்து உள்ளனர்.
இதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர். முருகன் தலைமையில் தீவிர வரி வசூல் பணி துவங்கி நடந்தது. இந்த பணியின் போது ஊராட்சியின் உரிய அனுமதி இன்றி புதியதாக கட்ட பட்டகட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த கட்டிடங்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கவும், நிலுவையில் உள்ள வரியினங்களை உடனடியாக சம்பந்தபட்ட தொழிற்சாலை நிர்வாகம் செலுத்தவும் அவர்களை நேரில் சந்தித்து அறிவுறுத் தினார். தவறும் பட்சத்தில் நிலுவை வைத்துள்ள தொழில் நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார்.
மாதனூர் கிராம ஊராட்சி பி டி ஓ. சிவலிங்கம், ஊராட்சி தலைவர். சுவிதா கணேஷ், துணை தலைவர்.விஜய் ஊராட்சி செயலாளர். பாலகிருஷ்ணன்
உள்ளிட்டவை பலர் உடனிருந்தனர்.