திருவாரூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தின் நன்னிலம் வட்ட சிறப்பு தலைவர் சீதாராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை அமைக்க வேண்டும் விரல் ரேகை பதிவு ஆதார் சரிபார்ப்பு 40 சதவீதம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் டி என் சி எஸ் சி எடை தராசு அலுவலக கணினியோடு இணைந்து ரசீது வழங்கிய பின்பு தான் நியாய விலை கடை தராசு விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட வேண்டும் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும் கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்குதல் ஐ ஏ எஸ் தலைமையில் ஊதியக்குழு அமைத்து ஒன்பதாவது மாநில ஊதிய மாற்றக் குழுவுடன் சேர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 30 அம்ச கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட தலைவர் சண்முகவேல் மாவட்ட தலைவர் மற்றும் மாநில துணை தலைவர் குணசீலன், மகளிர் அணி தலைவி சரளா வட்ட பொருளாளர் சுரேஷ் கண்ணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்