வேலூர்=30
செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கினால் அதனை எதிர்த்து தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவியை சந்தித்து மனு அளிப்போம்.
வேலூரில் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சி தலைவர் பேட்டி…
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களால் தொடங்கப்பட்ட “தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சி”யின் ஆலோசனை கூட்டம் இன்று வேலூரில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் “பாரத எல்லையை காத்தோம் இனி மக்களை காப்போம்” என்ற முழக்கத்தோடும், இந்திய முன்னாள் ராணுவ வீரர்களால் பொதுமக்களுக்காக துவங்கப்பட்ட முதல் அரசியல் கட்சியாக ” தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சி” இருப்பதால், கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடைபெற்றது
பின்னர் செய்தியாளர்களுக்கு ” அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பாபு அளித்த பேட்டியில் “முன்நாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில், மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவியை வழங்கக்கூடாது. அமைச்சர் பொறுப்பு வழங்கினால், சட்ட திட்டங்கள் குலைந்து விடும் என்பதால் அமைச்சர் பொறுப்பு வழங்கக் கூடாது என தமிழ்நாடு கவர்னருக்கு
“தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சியின் மூலம் கடிதம் கடிதம் அனுப்பி இருக்கிறோம்.
மேலும்,செந்தில் பாலாஜி ஜாமீனில் மட்டுமே வெளியே வந்துள்ளார் அவர் நிரபராதி என்று அறிவிக்கப்படாத நிலையில் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினால் அதனை எதிர்த்து, தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சி
கவர்னரை நேரில் சந்தித்து மனு அளிக்கும். அதோடு உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்வோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செந்தில் பாலாஜியை தியாகி என்று கூறியிருப்பது, மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. செந்தில் பாலாஜி தியாகி என்றால் இந்திய எல்லையில் மக்களுக்காக உயிரையே தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள் யார்? திமுக தொடர்ந்த வழக்கிலும், அமலாக்கத்துறை சோதனை நடத்தி அதன் மூலம் அவர் மீது வழக்கு தொடர்ந்து அந்த வழக்கில் அவள் சிறைக்கு சென்றுள்ளார்.. எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஊழல் செய்தால் அவர் துரோகி என்றும் அதே செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்து ஊழல் செய்தால் அவரை தியாகி என்றும் கூறுவது வெட்கக்கேடான செயல். அவரை தியாகி என்று முதல்வர் அழைத்திருப்பது எல்லையில் உயிர் நீக்கும் எங்களை எவ்வாறு அழைப்பார்கள். என்று அவர் கேள்வி எழுப்பினார்.