தக்கலை ஜன 26
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மூலச்சலில் தனியார் மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் வைத்து நீரிழிவு நோயும் வர்ம மருத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கத்தில் டாக்டர் ராஜேந்திரன் வர்ம மருத்துவத்தில் நீரழிவு நோயின் வரலாறு , வர்ம மருத்துவத்தின் மூலம் நீரிழிவை எப்படி கட்டுப்படுத்துவது
என்பது போன்ற தலைப்புகளில் உரையாற்றினார். தொடர்ந்து
நீரிழிவும் வர்ம மருத்துவமும் என்ற நூல் வெளியிடப்பட்டது.
மேலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் உதவி இயக்குனர் டாக்டர் சரோஜா,
அரசினர் சித்த மருத்துவ கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் சசி, அரசினர் சித்த மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் லஷ்மண் ராஜ்,
டாக்டர் ஆனந்தராஜ், இந்திரா ராஜேந்திரன், ராமசாமி,
பஞ்சபட்சி நாராயணன், தாமஸ் ஆசான், கிறிஸ்துதாஸ் ஆசான், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.