சென்னையில் வரும் ஜனவரி 26, நாட்டின் குடியரசு தினவிழா பிரமாண்டஅணிவகுப்பில்
பங்கேற்க, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தேர்வு கர்நாடகா மாநிலம் தாவணிக்கரையில் 05/11/24 முதல் 14/11/24 வரை நடைபெற்றது.
இதில் கலசலிங்கம் பல்கலை பல்கலை பி.டெக் வேளாண்மை பொறியியல் பயிலும் மாணவி
ம.சிவசங்கரி பங்கேற்று சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்டு, குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பதற்கான ஆணையை மாநில நாட்டு நலத் திட்ட அலுவலர் முனைவர் பிஎன் குனா நிதி மாணவர்க்கு வழங்கியுள்ளார்.
இதன்மூலம் தமிழ்நாட்டிற்கும், கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் மாணவி சிவசங்கரி யை,வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன்,
இணை வேந்தர் டாக்டர்எஸ்.அறிவழகி
ஸ்ரீதரன், துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன்,பதிவாளர் முனைவர் வி,வாசுதேவன், துறைத்தலைவர் முனைவர் ஷாஹிர், பல்கலை நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகள் த.ராஜ்பிரதீஷ், வி.தினேஷ் குமார் ஆகியோர் பாராட்டினர்