மார்த்தாண்டம் டிச 3
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் நல்லசிவம் மேற்பார்வையில், மார்த்தாண்டம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்லசாமி தலைமையில் , சிறப்பு உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ஸ்டீபன் மற்றும் காவலர்கள் மார்த்தாண்டம் நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, TN75AL8437 (royal enfield)எண் கொண்ட வாகனத்தில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தப்பட்டிருந்ததால் அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞருக்கு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு தக்க அறிவுரைகள் வழங்கிஅனுப்பி வைக்கப்பட்டது.