கடைய நல்லூர் பிப்.28
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை மற்றும் தேசிய பசுமை படை இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சியில் சாதனா வித்யாலயா மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறுதானிய உணவு சார்ந்த கண்காட்சியுடன் கலந்து கொண்டு மாணவர்களின் தனித்திறன் வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு கமல் கிஷோர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார்கள். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உயர்திரு ரெஜினி அவர்கள் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் மன்றம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி விஜயலட்சுமி அவர்கள் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது. சாதனா வித்யாலயா மாணவர்களுக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. குற்றாலம் வனச்சரக அலுவலர் உயர்திரு சீதாராமன் அவர்களும் வட்டார வளமைய அலுவலர் உயர்திரு மாரியப்பன் அவர்கள் பரிசளிப்பு விழாவில் பரிசு வழங்கினார்கள். போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் சசிபிரியா, சஞ்சய், வைபவ், இத்ரீஸ் ஆகியோரையும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை தீபா ஆகியோரை உயர்திரு ரங்கராஜன் அவர்கள் நடுவர்கள் பேராசிரியர் முரளிதரன், பேராசிரியர் சொர்ணம் மயில்கண்ணு ரமேஷ் தாளாளர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினார்