நாகர்கோவில் ஜூலை 18
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்,விஜய்வசந்த்
தக்கலை அமலா கான்வென்ட் பள்ளிக்கு சத்துணவு கூடம் அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் முடிவடைந்த நிலையில் கட்டிடத்தை நேற்று திறந்து வைத்தார். பின்னர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில்
காங்கிரஸ் கமிட்டி பத்மனாபபுரம் நகர தலைவர் ஹனுகுமார்,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இரத்தினகுமார்,
மாவட்ட துணைத்தலைவர் ஜோன்ஸ் இம்மானுவேல், தக்கலை வட்டார தலைவர் பிரேம்குமார் , தக்கலை ஊராட்சி ஒன்றிய தலைவர் அருள் அந்தோணி குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜான் கிறிஸ்டோபர் , மாவட்ட செயலாளர்கள் பால் சைலஸ் தேவி , ப்ரோடி மில்லர் , மாவட்ட சமூக ஊடக துறை செயலாளர் பீர் மைதின் , நகர மகிளா காங்கிரஸ் தலைவி நசியா நகர ஓபிசி தலைவர் ஜேசுராஜா
நகர காங்கிரஸ் துணைத்தலைவர் இப்ராஹிம் குட்டி , அம்ஜத்கான் அப்பாஸ் , ஜான் நிர்மல், பிரசன்னகுமார் , விஜயகுமார் , ரியாஸ் நாசர் , லிசமேரி , மைக்கேல்ராஜ் , ராஜம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி நிர்வாகம் சார்பில் விஜய் வசந்த் எம் பி க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இறுதியாக
அமலா கான்வென்ட் மகளீர் மேல்நிலை பள்ளி, துவக்கப்பள்ளி, மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகிகளுக்கும், ஆசிரிய பெருந்தகையோருக்கும், மாணவ செல்வங்களுக்கும், குறிப்பாக தலைமை ஆசிரியருக்கும் காங்கிரஸ் பேரியக்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.