சங்கரன்கோவில். ஆக.19.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இந்தக் கோயில் 11ம் நூற்றாண்டில் உக்கிரபாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு, சித்திரைதொடர்ந்து சங்கவநாராயண சுவாமி கோயிலில் தமிழ்நாடு அரசு இந்து அறநிலைத்துறை சார்பில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு கும்பாபிஷேக பணிகளுக்காக கடந்த 2022 ஆகஸ்ட் 22 ஆம் தேதி பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியிலிருந்து 9:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கோயிலின் ராஜகோபுரம் மற்றும் சங்கரலிங்க சுவாமி சன்னதி, சங்கரநாராயண சுவாமி சன்னதி, கோமதி அம்மன் சன்னதி விமானங்கள் வர்ணம் பூசும் பணி சண்முகர் சன்னதி சீரமைப்பு, கோயிலின் முன் மண்டபத்திற்கு வர்ணம் பூசும் பணி , அன்னதான கூடம் சீரமைக்கும் பணி உங்கிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ,
கும்பாபிஷேகத்தைை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிலில் நடந்து வரும் கும்பாபிஷேக விழா ஏற்பாடு பணிகளை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கான இறுதி கட்ட ஏற்பாடு பணிகள் குறித்து கோயில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் .இந்த நிகழ்வின் போது கோயில் துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா ,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீதாலட்சுமி ராமகிருஷ்ணன், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகர செயலாளர் பிரகாஷ்,, கோயில் பொறியாளர் முத்துராஜ், கோயில் கண்காணிப்பாளர் ராஜகோபால் உள்பட கவுன்சிலர்கள் திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.