திருப்பூர் பிப்:15
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை கலந்த
பான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற் பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேற்படி விற்பனை செய்யும் கடை கள் மூடி சீலிடப்படு வதோடு கடும் அபராதம் விதிக்கப்பட்டு. நடவடி க்கை எடுக்கப்பட்டு வரு கின்றது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா மற்றும் நிக் கோட்டின் கலந்த புகை யிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர்.கிறிஸ்து ராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.பா.விஜயலலி தாம்பிகை, உணவு பாது காப்பு அலுவலர்கள், உள்ளாட்சி துறையினர் மற்றும் காவல்துறையினர் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி அருகிலுள்ள பெட்டிகடைகள், TASMAC பார் கடைகள் மற்றும் TAS MAC ஐ சுற்றியுள்ள பகுதிக ளிலுள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் மேற் கொண்ட திடீர் ஆய்வின் போது
ஆத்துப்பாளையம் பகுதியில் 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேற்படி அபராதத் தொகையினை தமிழக அரசு கருவூலத்தில் மின் னனு பணபரிவர்த்தனை ( challan) வாயிலாக மட் டுமே செலுத்த முடியும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்க ளின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொ ருட்டு ஹான்ஸ், குட்கா, கூல்லிப், பான் மசாலா போன்ற பொருட்கள் விற் பனை செய்வதை தடுக்கும் பொருட்டு முதல் முறையாக குட்கா விற் பனை செய்யும் குற்றத்தி ற்க்கு ரூ.25,000/ அபராதம் மற்றும் 15 நாட்கள் கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும், இரண் டாம் முறை குற்றத்தி ற்க் காக ரூ.50,000/ அபராதம் விதிப்பதோடு 30 நாட்களுக்குகடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும் மற்றும் மூன்றாம் முறை குற்றத்திற்க்காக ரூ. 1,00,000/ அபராதம் விதிக்கப்பட்டும், 90 நாட் களுக்கு கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில், பெட்டி கடைகள் மற்றும் TASMAC பார் பெட்டி கடைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பெட்டி கடைகளிலும் அர சால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா ஹான்ஸ் போன்ற நிக் கோட்டின் கலந்த புகை யிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து முற்றி லும் ஒழிப்பதற்கு தொடர் நடவடிக்கை மாவ மாவட்ட முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில்
இத்தகைய
பான் மசாலா மற் றும் புகையிலை பொருட் கள் விற்கப்படுவதை உடனடியாக 9444042322 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லதுTN food safety con sumerApp என்ற செயலியில் பதிவேற்றம் செய்தோ புகார் அளிக்கலாம்.