பரமக்குடி,நவ. 27 : அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி ஊதிய உயர்வு சட்டமன்ற கூட்டத் தொடரில் வரலாம் என தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவா தங்கராசு தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் தங்கராஜ் செய்தியாளிடம் கூறுகையில்”
மதுரை மண்டல அளவிலான அரசு கல்லூரிகள் சுயநிதி கல்லூரிகள் பல்கலைக்கழக அளவிலான உயர் கல்வித் துறை பங்களிப்பாளர் கூட்டம் நடைபெற்றது. உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் உள்ளிட்ட உயிர் கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் சார்பில் கருத்துக்கேட்பு கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான ஆலோசனைகளை சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயர் கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், கல்லூரி கல்வி ஆணையர் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி கௌரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி சம்பளம் 50 ஆயிரம் ரூபாயும் பணி நிரந்தர கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை பரிசீலனையில் உள்ளதால் விரைவில், தமிழக முதல்வர் சட்டமன்ற கூட்டத்தொடரில் நல்ல முடிவினை அறிவிக்க வாய்ப்புள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ஆகையால் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்படலாம் என தெரிவித்தார்