ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்ஸ் தலைவராக (2024-25) ரொட்டேரியன் டாக்டர் கர்லின் எபி தலைமை ஏற்றார்.
இந்நிகழ்ச்சி வின்சர் Castle ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்டத்தின் வருங்கால ஆளுநர் ரொட்டேரியன் சிவசுந்தரம் (2025-26) கலந்து கொண்டார். மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் சிவக்குமார் (2024-25) ரொட்டேரியன் பூங்கொடி, துணை ஆளுநர் ரொட்டேரியன் விஜய் ஆனந்த், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள், முன்னாள் துணை ஆளுநர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முன்னாள் தலைவி ரொட்டேரியன் வசுமதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். ரொட்டேரியன் அர்ச்சனா செயலாளராகவும், ரொட்டேரியன் ஹேமலதா பொருளாளராகவும் பதவி ஏற்றனர். 50 லட்சத்திற்கு அதிகமாக ப்ராஜெட்டுகள் திட்டமிட்டு தொடங்கப்பட்டது. தையல் எந்திரங்கள், சைக்கிள்கள், படிப்பிற்கான உதவித்தொகை, மருத்துவத்திற்கான உதவித்தொகை, அரிசி மற்றும் மளிகை பொருட்கள், ஹெல்மெட், ரெயின் கோட் போன்றவை அன்று வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக திருமதி. லதா ரிஜினல் ஜான்ட் டைரக்டர், திரு. ரவிச்சந்திரன் திறன் பயிற்சி டைரக்டர், அநேக துறைகளில் இருந்தும் அழைக்கப்பட்டிருந்தனர். முடிவில் ரொட்டேரியன் அர்ச்சனா செயலாளர் அனைவருக்கும் நன்றி கூறினார்.