குமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழவிளை முத்தாரம்மன் திருக்கோவில் மேற்கூரை அமைப்பதற்காக நாகர்கோவில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சமும், பழவிளை ஊர் பெருந்தலைவர் காமராஜர் நினைவு படிப்பகம் மற்றும் மேல் தளத்தில் தகரக் கொட்டகை அமைத்ததற்கு ரூபாய் 2.5 லட்சம் ஒதுக்கீடு செய்து மக்கள் பயன் பாட்டுக்காக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி திறந்து வைத்தார். உடன் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் வீரசூர பெருமாள், பாஜக நிர்வாகிகள் சிவசீலன், ஜாக்சன், சந்திரசேகர், பழவிளை ஊர் நிர்வாகிகள் முருகேசன், நாகராஜன், கிருஷ்ணமணி,ரமேஷ், ஞானசேகரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



