ஆரல்வாய்மொழி, அக். 21 –
ஆரல்வாய்மொழி அடுத்த தோவாளை பகுதியை சேர்ந்தவர் கோபால் மகன் கார்த்திக் (26). நேற்று மாலை இவர் பைக்கில் ஆரல்வாய்மொழியில் இருந்து தோவாளை நோக்கி சென்று கொண்டிருந்தார். மங்கம்மாள் சாலை அருகே செல்லும்போது நாகர்கோவில் இருந்து சென்னைக்குச் சென்ற அரசு விரைவு பஸ்சில் பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்த கார்த்திக் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இறந்து போனவர் உடலை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த கார்த்திக் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் தான் அவர் ஊருக்கு வந்துள்ளார்.
வீட்டில் இருந்தவர்களிடம் நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு கார்த்திக் சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்ததாக தகவல் அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



