மே:22
திருப்பூர் மாவட்டத்தில்,
20ம் தேதி முதல், ஜமாபந்தி
(வருவாய்த்துறை வரவு-செலவு கணக்கு தணிக்கை) துவங்கி நடைபெறுகிறது. மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும் காலை முதல் தொடங்கியது.
திருப்பூர் வடக்கு உள்வட்டம், திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் திரு.பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வடக்கு வட்டாச்சியர் வே.கதிர்வேல் , குடிமைப்பொருள் வட்டாச்சியர் உஷாராணி உள்ளிட்ட அலுவலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவத்தலைவர் சமூக ஆர்வலர்களாகிய ஈ.பி.அ.சரவணன் கலந்து கொண்டு அளித்திருந்த மனுவில் திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், நெருப்பெரிச்சல் கிராமம், பட்டா எண். 1120-60 பத்திரப்பதிவுத் துறை சம்பந்தப்பட்ட சரியான பதிவு ஆவணம் இல்லாமல் முறைகேடாக, மோசடியாக திருப்பூர் விகாஸ் சேவா டிரஸ்ட் பெயரில் க.ச.எண். 432 B / 2 சேர்க்கப்பட்டுள்ளதை உடனடியாக அடியோடு ரத்து செய்ய வேண்டும். என வருவாய் துறை தரப்பில் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.
வருவாய்த்துறையின் ஜமாபந்தி என்கிற பாரம்பரிய திருவிழா, திருப்பூரில் துவங்கியது

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics