மதுரை டிசம்பர் 31,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தன் விருப்ப ஓய்வு பெற்று / மருத்துவத் தகுதியின்மையினால் விடுவிக்கப்பட்டு ஓய்வூதியம் பெறுபவர்கள் / மற்றும் இறப்பின் காரணமாக (வாரிசு) குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் தங்கள் வாழ்நிலையை மெய்ப்பிக்கும் முகமாக 2025 ஜனவரி 2ம் தேதி துவங்கி மார்ச் 20ம் தேதிக்குள் இப்போக்குவரத்துக் கழகத்தின் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மண்டலங்களை சேர்ந்தவர்கள் மதுரை தலைமையகம், திண்டுக்கல் 1 கிளை, தேனி கிளை விருதுநகர் தலைமையகம் மற்றும் திருவில்லிப்புத்தூர் கிளை ஆகிய ஐந்து இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து நேரில் ஆஜராகி ஒப்பமிட வேண்டுமெனவும் அதே போல் வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருப்பவர்கள் அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் அந்தந்த பகுதியில் உள்ள இ.சேவை மையத்தில் TNS-103 Pensioners Life Certificate Portal-லில் 01.01.2025 முதல் 31.03.2025 வரையிலான காலத்தில் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப் படுகிறது.