மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரியில்
பண்டிதமணி அரங்கில்
தமிழ்த்துறையின் முதுகலை மாணவர்களுக்கான ஆய்வுமன்றக் கருத்தரங்கம்
உதவிப்பேராசிரியர் முனைவர்
த.முத்தமிழ் தலைமையில்
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்
சு.காந்திதுரை ஆய்வு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ரே. கோவிந்தராஜ்
ஆகியோர் முன்னிலையில்
நடைபெற்றது.
கருத்தரங்கில் மாணவி க. ரூபனாதேவி தொகுத்து வழங்கினார். மாணவி ச.ரினிஷகானா வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து
மாணவி
க.முத்துப்பாப்பா ஆற்றுப்படை நூல்களில் விருந்தோம்பல் என்ற தலைப்பிலும் மாணவி சோ.நாகலெட்சுமி தஞ்சாக்கூர் காவேரி அய்யனார் மற்றும் சமய கருப்பணசுவாமி கோவிலில் நடைபெறும் கப்பரைத் திருவிழா என்ற தலைப்பிலும் மாணவி
கு.நாராயணி கூடலழகர் திருக்கோவிலின் வரலாறும் அதன் சிறப்பும் என்ற தலைப்பிலும் மூன்று கட்டுரைகள் வாசித்தனர்.
நிகழ்வின் நிறைவாக மாணவி சி.சாருபார்கவி நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியின் போது தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் தமிழ்துறை ஆய்வு மாணவர்கள் மற்றும் முதுகலை மாணவ மாணவியர் பங்கேற்றனர்.